வணங்குகின்றேன். .


எழுதிமுடித்தவன் அரைக்கவிஞன் - நல்ல

விமர்சகன் கிடைத்தால் முழுக்கவிஞன் !
Showing posts with label விழுங்கிட்டான் கவிதைபற்றி. Show all posts
Showing posts with label விழுங்கிட்டான் கவிதைபற்றி. Show all posts

Sunday, February 26, 2012

என் கவிதை- "விழுங்கிட்டான்" பற்றி. . .

மருத்துவனான எனக்கு பொதுவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களே அதிக வாடிக்கையாளர்கள் .வைத்தியம் ஆனபிறகு பணம் கொடுப்பதில் சிலசமயங்களில் கொஞ்சம் தாமதப் படுத்துவார்கள்.பணம் பெறும்போது உற்று கவனிக்கும்போதுதான் மூக்குத்தியோ கம்மலோ கழற்றப்பட்டிருப்பது தெரியும்.அந்தக்காலத்தில் எல்லாம் சந்துக்குச்சந்து மார்வாடிக்கடைகள். என் உதவியாளர் மூலமாக எளியமக்கள் எதர்பாராத செலவுகளை 'சமாளிக்கும்' முறைகளை அறிந்தேன். நெருடலாக இருந்தாலும் யதார்த்தநிலையில் வாழ்கைமுறை பழகிப்போனது
இந்தச்சூழ்நிலையில் குழந்தை காசுவிழுங்கிவிட்டால் ( அப்போதேல்லாம் 25பைசாதான் சின்னது) அதன் பாதிப்பாகவே இந்தக்கவிதை.
இந்தப்பின்னணியில் கவிதையை மீண்டும் படித்துப்பார்க்கவும். உதட்டில் ஏற்பட்ட புன்முறுவலை புறந்தள்ளி அந்த ஏழைத்தாயைப் போலவே உங்கள் இதயமும் கொஞ்சம் கனத்துப்போகலாம். . .
பாரதிபாசறைசெயலர் முனைவர் மா கி இரமணன் என்னை அறிமுகப்படுத்தும்போதெல்லாம் இந்தக்கவிதையை எனக்கு அடையாளப்படுத்து
வார். அணிந்துரை நல்கிய முனைவர் ஔவை நடராசனார் அவர்களும் தனக்கு நெருக்கமான புலவர் பு சி கிருஷ்ணமூர்த்தியிடம் ' குழந்தை விழுங்கியது ஒரு ரூபாய்; மருத்துவரிடம் சென்றேன்-மருத்துவர் விழுங்கினார் நூறு ரூபாய்' என்று எழுதியவர்தானே என்று நினைவுகூறுவாராம்.
இந்தவருடத்து (2011)சாலமன்பாப்பையா அவர்களின் தீபாவளி பட்டிமன்றத்தில் பேராசிரியர் ஒருவர், இந்தக் கவிதையின்கருவை கதையாகச்சொல்லி தன் வாதத்திற்கு
வலு சேர்த்தார். தன்கவிதை ஏதோவொரு வடிவத்தில் பேசப்படும்போது படைப்பாளிக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது--
" செய்யும்வரைதான் சிலை சிற்பிக்குச் சொந்தம் ; செய்துமுடித்து கண்திறந்துவிட்டால்
எல்லோருக்கும் சொந்தமாகிவிடும்,--
கவிதைகூட அப்படித்தானோ. . .!
இதோ அந்தக் கவிதை
-----=----====---------=----==---

"விழுங்கிட்டான்"

உள்ளங்கையில் வெறுமனே
விளையாடிக் கொண்டிருந்தது
இருபத்தைந்து காசு வில்லை
திடீரெனத் தாவி விட்டது
குழந்தையின் வயிற்றுக்கு.
பதைத்துப்போனாள் தாய்
மூக்குத்தியை தடவியபடி-
'விழுங்கிட்டான் மருத்துவன்
இருபத்தைந்து ரூபாய்'