வணங்குகின்றேன். .


எழுதிமுடித்தவன் அரைக்கவிஞன் - நல்ல

விமர்சகன் கிடைத்தால் முழுக்கவிஞன் !

Tuesday, August 7, 2012

thirumandhirum part 1



என்றும் அன்புடன்Drஆ ச கந்தன் / DrA S Kandhan

திருமந்திரம் - முதல்பாகம்

திருவொற்றியூர் பாரதிபாசறை சார்பில் முனைவர் புலவர் மா கி இரமணன் எட்டாண்டு காலம் தொடர்சொற்பொழிவினை மாதம் ஒரு சொற்பொழிவாக நிகழ்த்தி நிறைவு செய்தார்.
இது எட்டாண்டுக்கு முன்னர் துவக்கவிழாவில் கவிமலராக வாசிக்கப்பட்டது. . .

என்றென்றும் திருமந்திரம்

முடிதுறந்து காடேகிய இராமனுக்கு
விஷஅம்பெனும் தந்தைசொல் ஒருமந்திரம்

யாக யோகம் கற்றும் இராவணனுக்கு
அசுரகுல அன்னைசொல் ஒருமந்திரம்

சூதாடித் தோற்கினும் பாண்டவருக்கு
வாக்குதவறா அண்ணன்சொல் ஒருமந்திரம்

கொடுக்காத வித்தைக்கும் காணிக்கை
ஏகலைவனுக்கு ஆசாரியன்சொல் ஒருமந்திரம்

புராணகால மனைவியர் இல்லறநெறியில்
கைபிடித்த கணவன்சொல் ஒருமந்திரம்

நவீனகால கணவருக்கில்லை வேறுவழி
நல்சுகம்தரும் மனைவிசொல் ஒருமந்திரம்

எண்ணற்ற மந்திரங்கள் யாவர்க்குமே
பயன்கருதி வேறுபடும் அவரவர்க்குமே

தடுமாறாது கொடும்பகை முடித்திடவே
உதவவரும் பஞ்சதந்திரம் ஒருமந்திரம்

அறம் பொருள் வீடுபேறு பெற்றிட
வகைசொல்லும் நவதந்திரம் திருமந்திரம்

மூலன்செய்த மூவாயிரம் திருமந்திரம்
வல்வினை நிர்மூலம் செயும் திருமந்திரம்

திருமந்திரம் திருமந்திரம்
என்றென்றும் திருமந்திரம்

திருமந்திரம் திருமந்திரம்
நன்றென்றும் திருமந்திரம்